ஒரு எக்ஸாமை ஒழுங்கா நடத்தத் துப்பில்லை! — நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக அமைச்சர் நிர்மல் குமார்

Share this Video

சென்னையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய தமிழக அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார், நீட் (NEET) தேர்வால் நாடு முழுவதும் மாணவர்கள் சந்திக்கும் மன உளைச்சல்கள் மற்றும் உயிரிழப்புகள் குறித்துக் கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்தார். "ஒற்றைத் தேர்வைக் கூட சரியாக நடத்தத் தெரியாத மத்திய அரசு, மாணவர்களின் எதிர்காலத்தோடு விளையாடுகிறது" எனக் குற்றம்சாட்டிய அவர், நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்துவிட்டு பழைய சேர்க்கை முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார். மேலும், கோச்சிங் சென்டர்களின் லாபத்திற்காகவும் வியாபார நோக்கத்திற்காகவும் மட்டுமே இந்தத் தேர்வு முறை பயன்படுவதாகச் சாடினார்.

Related Video