நெடுஞ்சாலை பணிகளை கொட்டும் மழையில் நனைந்தபடி அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அதிரடி ஆய்வு !

Share this Video

சென்னை அடுத்த காட்டுப்பள்ளி முதல் மகாபலிபுரம் பூஞ்சேரி வரையில் 2468 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 5 கட்டங்களாக சென்னை எல்லை சாலை பணிகள் நடைபெற்று வருகின்றன. முதற்கட்டமாக காட்டுப்பள்ளி முதல் பஞ்செட்டி வரையிலான 25 கி.மீ. தூரம் வரை நடைபெறும் பணிகளை நெடுஞ்சாலை துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு மேற்கொண்டார். ஆதவ் அர்ஜுனா ஆய்வு மேற்கொள்ளும் போது திடீரென மழை கொட்டியது. மேலும் மரக்கன்றுகளை நடும் போது மழை பெய்ததால், அவரது உதவியாளர்கள் குடை பிடித்தனர். அப்போது அதனை தள்ளி விட்டு மழையில் நனைந்தபடியே சென்று ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் உதவியாளரிடம இருந்து குடையை வாங்கி தனக்கு தானே குடையை பிடித்து கொண்டு சென்று ஆய்வு செய்தார்.

Related Video