
"அரசு பள்ளியே எனக்கு எல்லாவற்றையும் தந்தது" – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா
அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, அரசு பள்ளிகளே தனது வாழ்க்கைக்கு அடித்தளமாக இருந்ததாகக் கூறி, "அரசு பள்ளியே எனக்கு எல்லாவற்றையும் தந்தது" என்றார். கல்வியே மனிதனின் மிகப் பெரிய செல்வம் என்றும், தமிழ்நாட்டின் அரசு பள்ளிகளை உலகத் தரத்திற்கு உயர்த்த அரசு உறுதியாக செயல்படும் என்றும் தெரிவித்தார். அதேபோல், அரசு மருத்துவமனைகளும் சர்வதேச தரத்துக்கு மேம்படுத்தப்படும் என்றார். கல்வியுடன் இணைந்த விளையாட்டு, மாணவர்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும் முக்கிய கருவி என்றும் வலியுறுத்தினார்.
ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்