
மஹா விஷ்ணு கோயில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் ! தமிழக கேரளாவை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்பு !
கன்னியாகுமரி மாவட்டம் சாத்தன்கோடு மஹா விஷ்ணு கோயில் அஷ்ட பந்தன மஹா கும்பாபிஷேக திருவிழா கடந்த 20 தேதி துவங்கி நடைபெற்று வருகிறது விழாவில் முக்கிய நிகழ்வான அஷ்ட பந்தன மஹா கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது கோயில் தந்திரி ராகவேந்திரன் நம்பூதிரி தலைமையில் வேத பண்டிதர்கள் ஹோம குண்டத்தில் பூஜிக்கப்பட்ட புனித கும்பத்தை ஆலயத்தை வலம் வந்து மேள தாளங்கள் முழங்க மந்திர கோபுரத்தில் உள்ள கும்பத்தில் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது தொடர்ந்து முன்னதாக கணபதி ,மஹா விஷ்ணு சன்னதிகளில் அஷ்ட பந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது தொடர்ந்து சிறப்பு தீபாராதனை உட்பட பல பூஜைகள் நடைபெற்றது . தொடர்ந்து கும்பாபிஷேக வாழ்தரங்கம் நடைபெற்றது வெள்ளிமலை ஹிந்து தர்ம வித்யா பீடம் சுவாமி சைதானந்த ஜி மகராஜ் ஆசியுரை வழங்கினார் இந்த வாழ்தரங்க நிகழ்வில் பாஜக மேற்கு மாவட்ட தலைவர் ஆர்.டி சுரேஷ், கிழக்கு மாவட்ட தலைவர் கோப குமார்,பாஜக நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம் ஆர் காந்தி உட்பட பாஜக நிர்வாகிகள் இந்து முன்னணி மற்றும் சமயவகுப்பு பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு வாழ்த்துரை யாற்றினார்கள் அனைவருக்கும் கோயில் நிர்வாகம் சார்பில் பொன்னாடை போர்த்தி கெளரவிக்கவிக்கபட்டது தொடர்ந்து சமய வகுப்பு மாணவிகளின் பரதநாட்டியம் நடைபெற்றது இந்த நிகழ்வுகளில் தமிழகம் கேரளாவை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்