
திமுக ஆட்சிகாலத்தில் மட்டுமே மிகப்பெரிய ஊழல் நடந்தது.! பாயிண்டாக பேசி கைத்தட்டல் வாங்கிய குஷ்பு
மதுரை மத்திய சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் சுந்தர் சி-யை ஆதரித்து சிந்தாமணி பகுதியில் பிரச்சாரம் செய்த பாஜக மாநில நிர்வாகி குஷ்பு சுந்தர், மக்கள் மத்தியில் அனல் பறக்கும் உரையை நிகழ்த்தினார். மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களின் ஆளுமையை உருக்கத்துடன் நினைவு கூர்ந்த அவர், "அம்மா அவர்களைப் போல ஒரு கெத்தான பெண்ணையும், நேர்மையான ஒரு தலைவரையும் நாம் மீண்டும் பார்க்க முடியுமா என்பது சந்தேகமே; அவர் காட்டிய அந்தத் துணிச்சலும் கம்பீரமும் இன்றும் நமக்கு ஒரு மிகப்பெரிய பாடம்" என்று கூறி நெகிழ்ச்சியை ஏற்படுத்தினார்.