
இந்த மக்கள் விரோத திமுக ஆட்சியை வீழ்த்துவதே தங்களது முதன்மை இலக்கு - கொந்தளித்த குஷ்பு
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக செயற்குழு உறுப்பினர் குஷ்பு சுந்தர், வரவிருக்கும் தேர்தலில் போட்டியிடுவது குறித்த தனிப்பட்ட விருப்பங்களை விட, கட்சியின் முடிவே இறுதியானது என்றும், கட்சி யாரை வேட்பாளராக நிறுத்தினாலும் அவர்களது வெற்றிக்காகத் தான் பாடுபடப் போவதாகவும் தெரிவித்தார். தமிழகத்தில் ஊழல், போதைப்பொருள் புழக்கம் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாகக் குற்றம் சாட்டிய அவர், இந்த மக்கள் விரோத திமுக ஆட்சியை வீழ்த்துவதே தங்களது முதன்மை இலக்கு என்றார்.
Add Asianetnews Tamil as a Preferred Source
