
2010-ம் ஆண்டிலேயே அதிமுகவில் பொறுப்பில் இருந்திருக்கிறேன், அதிமுகவில் இணைந்த காளியம்மாள்..!
தமிழக அரசியலில் 'அடுக்குமொழிப் பேச்சாளர்' என்று அறியப்பட்ட காளியம்மாள், நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகி நீண்ட மௌனத்திற்குப் பிறகு அதிமுகவில் இணைந்துள்ளது அரசியல் களத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.தமிழக அரசியலில் தனி வழி' என முழங்கிய நாம் தமிழர் கட்சியின் பெண் சிங்கமாக வலம் வந்த காளியம்மாள், இன்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அக்கட்சியில் இணைந்துள்ளார்.