ஜெயலலிதாவுக்கே தண்ணிகாட்டிய தொகுதி... முதல்வராக்கிய மக்களே தோற்கடித்த வரலாறு தெரியுமா?

Share this Video

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை ஜெயிக்க வைத்து, பின்னாளில் தோற்கடித்த தொகுதி ஒன்று தமிழ்நாட்டில் இருக்கிறது. அந்த தொகுதியை பற்றி விரிவாக பார்க்கலாம். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் போச்சம்பள்ளி, நாகரசம்பட்டி, அரசம்பட்டி, ஜெகதேவி போன்ற தொகுதிகளை உள்ளடக்கியது தான் பர்கூர் தொகுதி. மாம்பழம் மற்றும் தென்னை விவசாயம் தான் இந்த தொகுதி மக்களின் பிரதான வாழ்வாதாரமாக இருந்து வருகிறது. பர்கூர் ஜவுளி மார்க்கெட் முக்கிய வர்த்தக வேலைவாய்ப்பாகவும் இருக்கிறது. ஜெகதேவி பகுதிகளில் கிரானைட் தொழிற்சாலை, பர்கூர் சிப்கார்ட், போச்சம்பள்ளி சிப்கார்ட் ஆகியவை மக்களுக்கு தொழில்துறை வேலை வாய்ப்புகளை வழங்குகிறது.

Related Video