
Jayalalithaa Assets: ஹைதராபாத்தில் ஜெயலலிதா சொத்துக்களை கவனிப்பது யார்? தொடரும் மர்மம்!
தமிழ்நாடு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துக்கள் தொடர்பான சர்ச்சை மீண்டும் சூடுபிடித்துள்ளது. ஹைதராபாத் ஸ்ரீநகர் காலனியில் உள்ள அவரது கட்டிடத்திற்கு, மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். 2017 முதல் செலுத்தப்படாத சொத்து வரியே இதற்குக் காரணம். சுமார் 83 லட்சம் ரூபாய் பாக்கி இருப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக GHMC தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.