
இரட்டை இலை சின்னத்தில் ஜெ.தீபா.?! எடப்பாடி பழனிசாமியின் 'மாஸ்டர் பிளான்' பலிக்குமா?
ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா மீண்டும் அரசியலில் நுழையக்கூடும் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. 2026 சட்டமன்றத் தேர்தலில், ஓ.பன்னீர்செல்வத்திற்கு எதிராக எடப்பாடி பழனிசாமி தரப்பு தீபாவை களமிறக்க திட்டமிடுவதாக யூகிக்கப்படுகிறது. தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கி சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்தச் சூழலில், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா, மீண்டும் அரசியல் களத்தில் இறங்கப்போவதாக வெளியாகும் தகவல்கள் அஇஅதிமுக தொண்டர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் போட்டியிடும் அதே தொகுதியில், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக சார்பில் தீபா களமிறக்கப்படலாம் என்ற யூகங்கள் வலுத்து வருகின்றன.