இடி மின்னலுடன் மணிக்கு 50 கி.மீ வேகம்.. தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை?

Share this Video

Tamilnadu Weather: தென்கிழக்கு அரபிக்கடலில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 7 நாட்களுக்கு கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது. தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் கோடை மழை பெய்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில் இன்று முதல் அடுத்த 7 நாட்களுக்கு சென்னை வானிலை மையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதாவது சுமார் 1.5 கிமீ உயரத்தில் தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சதீவு பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. சுமார் 0.9 கிமீ உயரத்தில் தெற்கு கேரள கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சதீவு பகுதிகளிலிருந்து தென்மேற்கு மத்திய பிரதேசம் வரை உள் கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா வழியாக ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

Related Video