திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் ஆடி சுவாதி திருவிழா கோலாகலம்!

Share this Video

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் அமைந்துள்ள புகழ்பெற்ற அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் ஆடி சுவாதி திருவிழா மிகுந்த விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. இந்த விழாக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, திருக்கோவில் யானைக்கு சிறப்பு வெள்ளை நிற அலங்காரம் செய்யப்பட்டு வீதி உலா முன்னின்று நடத்தப்பட்டது. மேலும், சுந்தரமூர்த்தி நாயனார் தங்கப் பல்லக்கில் எழுந்தருளி கோவில் ரத வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந் நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

Related Video