
ஏழை மற்றும் நடுத்தர மக்களின் உணர்வுகளை இந்த அரசு மதிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்
எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு மற்றும் பெட்ரோல் விலை உயர்வால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வரும் நிலையில், பிரதமர் மோடி "பதற்றப்பட வேண்டாம்" என்று கூறுவது மக்களைக் கேலி செய்யும் செயல் என செல்வபெருந்தகை கடுமையாக விமர்சித்துள்ளார். சிலிண்டருக்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் வேதனையான சூழலை மத்திய பா.ஜ.க அரசு ஒரு கொண்டாட்டமாகப் பார்ப்பது கண்டிக்கத்தக்கது என்றும், ஏழை மற்றும் நடுத்தர மக்களின் உணர்வுகளை இந்த அரசு மதிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.