
நம்பர் முடிவாயிடுச்சி.! ஈபிஎஸ் சொல்லுவார்! பொடி வைத்து பேசிய ஜி.கே.வாசன்
ஜி.கே. வாசன், தொகுதிகளின் எண்ணிக்கை குறித்து "நம்பர் முடிவாயிடுச்சு" என்று சூசகமாகத் தெரிவித்தார். கூட்டணியில் எந்தவிதமான கருத்து வேறுபாடுகளும் இல்லை என்றும், உரிய நேரத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்களே அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிடுவார் என்றும் அவர் கூறினார். தற்போதைய நிலவரப்படி, பாஜக-விற்கு 27 இடங்களும், பாமக-விற்கு 18 இடங்களும், அமமுக-விற்கு 11 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், த.மா.கா-விற்கு 3 முதல் 5 தொகுதிகள் வரை ஒதுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.