
தூசியைப் பறக்கவிட்டுச் சீறிப்பாய்ந்த குதிரைகள் ! கமுதியில் அனல் பறந்த பாரம்பரியப் போட்டி !
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள கிராமத்தில் கோயில் திருவிழாவை முன்னிட்டு பாரம்பரியமிக்க குதிரை வண்டி எல்லைப் பந்தயம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகை தந்த ஏராளமான குதிரை வண்டிகள் பங்கேற்றன. பந்தய எல்லையை நோக்கி குதிரைகள் அதிவேகமாகச் சீறிப்பாய்ந்ததைக் கண்டு, சாலையின் இருபுறமும் திரண்டிருந்த திரளான பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கரவொலி எழுப்பி உற்சாக ஆரவாரம் செய்தனர்.