
ஈபிஎஸ் பேச்சால் கொதித்து போய் இருக்கிறார்கள் திமுக தொண்டர்கள்.!
எடப்பாடி பழனிசாமியின் அண்மைய பேச்சுகள் திமுக தொண்டர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி சென்னையில் அவசர செய்தியாளர் சந்திப்பை நடத்தினார். இந்தச் சந்திப்பின் போது ஆவேசமாகப் பேசிய அவர், "நாங்கள் தண்டவாளத்தில் தலைவைத்து படுத்தவரின் (கலைஞர் கருணாநிதி) பரம்பரை" என்று குறிப்பிட்டு, திமுகவினர் எந்த மிரட்டலுக்கும் அஞ்சமாட்டார்கள் என்பதை உறுதிபடத் தெரிவித்தார். கல்லக்குடி போராட்டத்தில் கருணாநிதி காட்டிய துணிச்சலை நினைவூட்டிய அவர், ஒரு முன்னாள் முதலமைச்சராக இருந்துகொண்டு எடப்பாடி பழனிசாமி தரக்குறைவாகப் பேசுவது அரசியல் நாகரீகம் அல்ல என்றும் சாடினார்.
Add Asianetnews Tamil as a Preferred Source
