ரீல்ஸ் சுற்றுவதில் மட்டுமே ஆர்வம்...மக்களின் துயரம் தெரியாத முதல்வர் விஜய்! – எடப்பாடி பழனிசாமி

Share this Video

தஞ்சாவூரில் அதிமுக சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில், முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசின் வாக்குறுதி மீறல்கள் மற்றும் நிர்வாகத் தோல்விகளைக் கண்டித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி காரசாரமாக உரையாற்றினார்.இந்த உரைத் தொகுப்பில், தேர்தல் வாக்குறுதியில் அளித்தபடி விவசாயிகளின் கூட்டுறவு வங்கிக் கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்யாமல் நிபந்தனைகள் விதித்து ஏமாற்றியது, மேகதாது விவகாரத்தில் தமிழக உரிமைகளை விட்டுக் கொடுத்தது மற்றும் டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முடக்கியது குறித்து முதல்வர் விஜய்யைக் கடுமையான வார்த்தைகளால் எடப்பாடி பழனிசாமி தாக்கிப் பேசியுள்ளார்.

Related Video