"பேச்சுவார்த்தை வேலைக்கு ஆகாது"... மேகதாது அணை விவகாரத்தில் துரைமுருகன் அதிரடி கருத்து

Share this Video

வேலூரில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் துரைமுருகன், மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் இதுபோன்ற தீர்மானங்கள் பலமுறை நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவித்தார். கர்நாடகத்தின் 7 முதலமைச்சர்களுடன் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும், மொத்தம் 36 முறை பேச்சுவார்த்தை நடந்தும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்றும் கூறினார். மேகதாது அணை கட்டப்பட்டால் தமிழகத்திற்கு காவிரி நீர் முறையாக கிடைக்காது என எச்சரித்த அவர், இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றமே இறுதி முடிவெடுக்க வேண்டும் என்றார். திறமையான வழக்கறிஞர்களை நியமித்து நீதிமன்றத்தில் வலுவாக வாதிட்டு, சட்டரீதியாக கர்நாடகாவை எதிர்கொள்ள வேண்டும்; பேச்சுவார்த்தையால் தீர்வு கிடைக்காது என்றும் துரைமுருகன் வலியுறுத்தினார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

Related Video