
திருமாவுக்கு தொகுதிகளை இறுதி செய்வதில் இழுபறி..? மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தும் திமுக..!
திராவிட முன்னேற்ற கழகம் தலைமையிலான கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், தொகுதிகளை அடையாளம் காணுவதில் இழுபறி நீடிக்கிறது. வியாழன் கிழமை இரவு வரை நடைபெற்ற பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படாத நிலையில் வெள்ளிக்கிழமை மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறுமென திருமாவளவன் தெரிவித்துள்ளார்.