முதலமைச்சர் விஜயைக் கண்டித்து திருச்சியில் திமுக ஆர்ப்பாட்டம் ! K.N. நேரு மற்றும் அமைச்சர்கள் ஆவேசம்

Share this Video

தமிழகச் சட்டப்பேரவையில் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய், திமுக தலைவர்கள் மற்றும் சர்க்காரியா கமிஷன் விவகாரம் குறித்துப் பேசியதற்குக் கண்டனம் தெரிவித்து, திருச்சியில் திமுக சார்பில் பிரம்மாண்ட ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசிய திமுக முதன்மைச் செயலாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான கே.என். நேரு, சட்டமன்றத்தில் மக்கள் பிரச்சினைகளுக்குப் பதிலளிக்காமல் முதலமைச்சர் விஜய் சினிமா வசனங்களைப் பேசுவது போலப் பேசி திசைதிருப்புகிறார் என விமர்சித்தார். மேலும், திமுக தலைவர்களின் தியாகத்தையும் வரலாற்றுப் பங்களிப்பையும் கொச்சைப்படுத்துவதை நிறுத்திவிட்டு, நேரடி வினாக்களுக்கு அரசு பதிலளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Related Video