
போலீஸ் வாகனத்தை முற்றுகையிட்ட ஆதரவாளர்கள் ! விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் கைது !
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டு, மருத்துவப் பரிசோதனைக்காகத் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். அப்போது மருத்துவமனையின் வெளியே திரண்டிருந்த அவரது ஆதரவாளர்களும் தொண்டர்களும் காவல்துறையினரின் வாகனத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொண்டர்களைக் கலைக்கக் காவல்துறையினர் முயன்றபோது, இருதரப்பிற்கும் இடையே கடுமையான வாக்குவாதமும் தள்ளுமுள்ளும் ஏற்பட்டு அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.