
DMK
தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் தொடங்கிய நிலையில், கொளத்தூர் தொகுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேட்புமனுத் தாக்கல் செய்தார். தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு வரும் 23-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளிலும் வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது. அனைத்து தொகுதிகளிலும் தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கான அலுவலகங்கள் அமைக்கப்பட்டு, தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.