
தமிழகத்தின் உரிமைகளைப் பாதுகாப்பதே தேமுதிகவின் முதன்மை இலக்கு ! பிரேமலதா விஜயகாந்த் பேட்டி!
தொகுதி மறுவரையறை (Delimitation) விவகாரத்தில் தமிழகத்திற்கு பாதிப்பு ஏற்படக் கூடாது என்பதில் தேமுதிக உறுதியாக உள்ளது என அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் அரசியல் நகர்வுகள் மற்றும் தொகுதி மறுவரையறை தொடர்பான பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்துப் பேசினார்.