
மத்திய அரசே மாணவர்களின் எதிர்காலத்தோடு விளையாடாதே! களத்தில் இறங்கிய CPI வீரபாண்டியன் எச்சரிக்கை!
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகில், நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கம் (SFI) மற்றும் மாணவ, மாணவிகள் இணைந்து பிரம்மாண்ட கண்டனப் போராட்டத்தை நடத்தினர். இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கலந்து கொண்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (CPI) தமிழக மாநிலச் செயலாளர் வீரபாண்டியன், மத்திய அரசுக்கு எதிராகக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து செய்தியாளர்களிடம் உரையாற்றினார்.