
CM Vijay-ன் கரூர் விசிட்: பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசு வேலை!
தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் அவர்கள் அரசு மற்றும் கட்சி ரீதியான நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக திருச்சி விமான நிலையம் வந்தடைந்தார். அங்கிருந்து சாலை மார்க்கமாக கரூர் செல்லும் முதல்வர் விஜய், கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுகிறார். மேலும், தகுதிவாய்ந்த பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்களுக்கு அரசு வேலைவாய்ப்புக்கான பணி நியமன ஆணைகளை வழங்குகிறார். இத்துடன், கரூரில் ரூ.1,700 கோடி மதிப்பீட்டிலான புதிய காலணி உற்பத்தி ஆலைக்கு அடிக்கல் நாட்டி, நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார். திருச்சி மற்றும் கரூரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்