
திருமண நிதி 2 மடங்கு உயர்வு.. சுதந்திர தின விழாவில் முதல்வர் விஜயின் 5 முக்கிய அறிவிப்புகள் !
சென்னை கோட்டையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் தேசியக் கொடியை ஏற்றிய முதலமைச்சர் விஜய், தமிழக மக்களின் நலன் மற்றும் நிர்வாகம் தொடர்பாக பல்வேறு முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார். திருமண நிதி உதவி உள்ளிட்ட மக்கள் நலத் திட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்தப்படும் என்றும், ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களின் பொருளாதாரச் சுமையை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். திருமண நிதி உதவி 2 மடங்கு உயர்த்தப்படும் என்ற அறிவிப்பு பொதுமக்களிடையே முக்கியத்துவம் பெற்றுள்ளது.மேலும், தமிழகத்தில் *லஞ்சம் இல்லாத வெளிப்படையான நிர்வாகத்தை* உருவாக்குவதே அரசின் முக்கிய நோக்கம் என முதல்வர் விஜய் தெரிவித்தார். “லஞ்சம் இல்லாத தமிழகத்தை அமைப்போம். நம்பிக்கையுடன் இருங்கள்; நல்லதே நடக்கும். வெற்றி நிச்சயம்” என்று அவர் உறுதியளித்தார். அரசின் கொள்கைகளுக்கு எதிரான எந்தவொரு செயல்பாடாக இருந்தாலும் அதை அரசு நிச்சயம் எதிர்க்கும் என்றும், நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை தொடர்ந்து கடைப்பிடிக்கப்படும் என்றும் கூறினார். சுதந்திர தின உரையில், “நாம் அடிமைப்பட்டுள்ளோம் என்ற எண்ணம் வந்தாலே மக்களிடையே ஒரு ஒற்றுமை வந்துவிடும்” என்று குறிப்பிட்ட முதல்வர், நாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்ட தலைவர்களின் தியாகங்களை நினைவுகூர்ந்தார். மக்களின் நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் அரசு செயல்படும் என்றும், அனைவருக்கும் சமமான வளர்ச்சி மற்றும் நலன் கிடைக்கும் வகையில் நடவடிக்கைகள் தொடரும் என்றும் முதல்வர் விஜய் தனது உரையில் வலியுறுத்தினார்.