
சட்டமன்றத்தில் சௌமியா அன்புமணி ஆவேசம்: உன்னிப்பாக கவனித்து குறிப்பெடுத்த முதலமைச்சர் விஜய்!
தமிழக சட்டப்பேரவையில் மது ஒழிப்பு மற்றும் பெண்கள் பாதுகாப்பு குறித்து பாமக எம்.எல்.ஏ. சௌமியா அன்புமணி ஆக்கப்பூர்வமான கருத்துகளை உணர்ச்சி பொங்க முன்வைத்தார். மதுவினால் ஏற்படும் சமூகச் சீரழிவுகள் குறித்து அவர் உருக்கமாகப் பேசப் பேச, அதைக் கேட்டுக்கொண்டிருந்த முதலமைச்சர் விஜய் அவர்கள், மிகுந்த ஆர்வத்துடன் கீழே குனிந்து அவர் சொன்ன முக்கியக் கருத்துகளைத் தனது குறிப்பேட்டில் உன்னிப்பாகக் குறிப்பு எடுத்துக்கொண்டார். தொடர்ந்து தனது உரையில், தமிழகத்தில் சமூக நீதியை நிலைநாட்ட உடனடியாக சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்றும், தமிழக இளைஞர்களின் நலன் கருதி தனியார் துறை வேலைவாய்ப்புகளில் 80% தமிழர்களுக்கே வழங்கப்பட வேண்டும் என்பதைக் கட்டாயமாக்கித் தனிச் சட்டம் இயற்ற வேண்டும் என்றும் சௌமியா அன்புமணி வலியுறுத்தினார். முதலமைச்சரின் கவனத்தை ஈர்த்த இந்த உரை அவையில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
