
தமிழ்நாடு காவல் துறையின் சிறப்பு விருதுகள் விழா: விருது வழங்கி சிறப்பித்த முதலமைச்சர் விஜய்!
சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் தமிழ்நாடு காவல் துறை சார்பில் சிறப்பு விருதுகள் வழங்கும் விழா கோலாகலமாக நடைபெற்றது. நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய், காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறை வீரர்களின் சிறந்த சேவையைப் பாராட்டி குடியரசுத் தலைவர் விருதுகள், மத்திய உள்துறை அமைச்சரின் விருதுகள் மற்றும் முதலமைச்சரின் பதக்கங்களை வழங்கி கௌரவித்தார்.