மத நல்லிணக்கம் போற்றுவோம்: காயிதே மில்லத் நினைவிடத்தில் தமிழக முதல்வர் விஜய்!

Share this Video

காயிதே மில்லத் முகமது இஸ்மாயில் சாஹிபின் 131-வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பெரிய மசூதியில் நடைபெற்ற சிறப்பு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் விஜய் பங்கேற்றார். அங்குள்ள காயிதே மில்லத் நினைவிடத்திற்குச் சென்ற முதலமைச்சர், மலர் வளையம் வைத்து அவரது சமூகப் பங்களிப்பையும், மத நல்லிணக்கத்திற்கான உழைப்பையும் நினைவு கூர்ந்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வில் அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள் மற்றும் இஸ்லாமிய சமூகத் தலைவர்கள் பலர் கலந்துகொண்டனர். இதையொட்டி வெளியான நெகிழ்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

Related Video