
முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் காணொளி வாயிலாகத் வளர்ச்சித் திட்டங்களைப் தொடங்கி வைத்தார்
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள், காணொளி வாயிலாகத் தமிழகம் முழுவதும் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைப் பயன்பாட்டிற்குத் தொடங்கி வைத்தார். இதன் ஒரு பகுதியாக, கோயம்புத்தூர் வ.உ.சி பூங்காவில் 'அறிவியல் மேதை' ஜி.டி. நாயுடுவின் திருவுருவச் சிலையை முதல்வர் திறந்து வைத்தார். இந்நிகழ்வில் துணை முதல்வர், பொதுப்பணித்துறை அமைச்சர், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் பங்கேற்றனர். ஜி.டி. நாயுடுவின் மகனான ஜி.டி. கோபால் இவ்விழாவில் கலந்துகொண்டு, தனது தந்தையின் கண்டுபிடிப்புகளையும் பங்களிப்பையும் அங்கீகரிக்கும் வகையில் சிலையமைத்ததற்கும், மேம்பாலத்திற்கு அவர் பெயரைச் சூட்டியதற்கும் தமிழக அரசுக்கு நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்தார்.
Add Asianetnews Tamil as a Preferred Source
