
மானமுள்ள திமுக தொண்டர்கள் ஏற்கமாட்டார்கள்.! கொங்கு மண்டலம் எங்களுக்குத்தான்! விளாசிய அண்ணாமலை
வாழ்க்கையிலும் அரசியலிலும் கசப்பான தருணங்கள் ஏற்படுவது இயல்புதான் என்றும், அவற்றை நீண்ட காலத்திற்குச் சுமந்து செல்லாமல் கடந்து செல்வதே நல்லது என்றும் அண்ணாமலை தனது உரையில் குறிப்பிட்டுள்ளார். ஒரு அரசியல் கட்சிக்குள் பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், இறுதியில் பொதுவான இலக்குகளுக்காக அனைவரும் இணைந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். தேர்தலில் போட்டியிடுபவர்கள் வெளி மாவட்டத்தைச் சேர்ந்தவர்களா அல்லது உள்ளூர்வாசிகளா என்ற விவாதங்களுக்கு இடமளிக்காமல், தகுதியுள்ள அனைவருக்கும் தேர்தலில் பங்கேற்க உரிமை உண்டு என்பதை அவர் தெளிவுபடுத்தினார்.