மக்களை ஏமாற்றிவிட்டது திமுக.! திருச்சியில் கொந்தளித்த அன்புமணி ராமதாஸ்.

Share this Video

கடந்த 5 ஆண்டுகளில் திமுக அரசு தனது தேர்தல் வாக்குறுதிகளில் 13 சதவீதத்தை மட்டுமே நிறைவேற்றியுள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார். திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழக அரசின் செயல்பாடுகள் குறித்து அடுக்கடுக்கான புகார்களை முன்வைத்தார். 500-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை அளித்து ஆட்சியைப் பிடித்த திமுக 13 சதவீத வாக்குறுதிகளை மட்டுமே நிறைவேற்றுள்ளதாகவும் அன்புமணி ராமதாஸ். குறிப்பிட்டார். வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி பலமான வெற்றியைப் பதிவு செய்யும் என்றும், இக்கூட்டணி 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளைக் கைப்பற்றி ஆட்சி அமைக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். தற்போதைய ஆட்சியின் மீது மக்கள் அதிருப்தியில் இருப்பதாகவும், கூட்டணி பலம் தங்களுக்கு வெற்றியைத் தேடித்தரும் என்றும் அவர் கூறினார்.

Related Video