
திமுகவுல சேந்துட்டோம்.! டி.டி.வி.தினகரன பத்தி கேட்காதிங்க.!பொருமி தள்ளிய அமமுக நிர்வாகிகள்.!
அமமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்த நிர்வாகிகள், சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். குறிப்பாக, முன்னாள் எம்.பி. கோபால் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்த பிறகு பேசுகையில், "நாங்கள் இப்போது முழுமனதுடன் திமுகவில் இணைந்துவிட்டோம்; இனிமேல் டி.டி.வி. தினகரன் பற்றியோ அல்லது அமமுக பற்றியோ எங்களிடம் எந்தக் கேள்வியும் கேட்காதீர்கள்" என ஆவேசமாகக் குறிப்பிட்டனர்.