தமிழகம் தற்போது போதைப் பொருள் மாஃபியாக்களின் கூடாரமாக மாறியுள்ளதாகக் குற்றம் சாட்டினார்.

Share this Video

பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களுக்கு அடிமையாகி வருவது வேதனை அளிப்பதாகத் தெரிவித்தார். கடந்த ஐந்து ஆண்டுகளில் 30-க்கும் மேற்பட்ட லாக்-அப் மரணங்கள் நிகழ்ந்துள்ளதாகவும், பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். ஆளுங்கட்சி பிரமுகர்கள் மணல் கொள்ளை, கள்ளச்சாராய விற்பனை மற்றும் இயற்கை வளக் கொள்ளையில் ஈடுபடுவதாகப் புகார் தெரிவித்த அவர், ஏழை மக்களின் சிறுநீரகங்கள் திருடப்படும் விவகாரத்தில் திமுக எம்.எல்.ஏ-வுக்குத் தொடர்பிருப்பதாகக் குற்றம் சாட்டினார். முதல்வர் ஸ்டாலின் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கத் தவறிவிட்டு, விளம்பரப் படங்களில் நடிப்பதிலேயே ஆர்வம் காட்டுவதாக எடப்பாடி பழனிசாமி சாடினார்.

Related Video