
விசில் போடு மாமே! சிஎஸ்கே ரசிகரைத் தூக்கிக் கொண்டாடிய விஜய் - மெர்சலான ரசிகர்கள்.
நெல்லை மண்ணில் மக்கள் வெள்ளத்திற்கு மத்தியில் உரையாற்றிய தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், வரும் சட்டமன்றத் தேர்தலில் தவெக ஆட்சி அமைவது உறுதி என்பதை மிகவும் ஆணித்தரமாகப் பதிவு செய்தார். "எல்லோரும் நல்லா இருப்போம், இனி எந்தத் தப்பும் நடக்க விடமாட்டேன்" என உருக்கமாகப் பேசிய அவர், அரசியல் களத்தில் தான் யாருக்கும் அஞ்சப்போவதில்லை என்பதைக் காட்டும் வகையில், திமுக மற்றும் பாஜக உள்ளிட்ட எந்த சக்தியாலும் தன்னை மக்களிடமிருந்து பிரிக்க முடியாது என்று சவால் விடுத்தார். 234 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களைத் தனது குடும்ப உறுப்பினர்களாகச் சித்தரித்த விஜய், "இந்தத் தேர்தலில் உங்கள் வீட்டுப் பிள்ளைக்குத்தான் நீங்கள் ஓட்டுப் போடப் போகிறீர்கள்" என்று கூறி நெகிழ்ச்சியை ஏற்படுத்தினார்.