
ஆடி மாதப் பிறப்பு : திருச்செந்தூர் முருகன் கோயிலில் அஸ்திர தேவர் தீர்த்தவாரி உற்சவம் விமரிசை!
ஆடி மாதப் பிறப்பை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் அஸ்திர தேவர் தீர்த்தவாரி உற்சவம் மிகச் சிறப்பாகவும் விமரிசையாகவும் நடைபெற்றது. இதையொட்டி அஸ்திர தேவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் தீர்த்தவாரி வழிபாடுகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பக்திப் பெருக்குடன் சுவாமி தரிசனம் செய்தனர். அதுகுறித்த சிறப்புக் காட்சிகள்!