
கோவை நேரு விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா திடீர் ஆய்வு!
கோயம்புத்தூர் நேரு விளையாட்டு அரங்கில் தமிழ்நாடு பொதுப்பணி, நெடுஞ்சாலைகள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அவர்கள் நேரில் சென்று ஆய்வு நடத்தினார். இந்த ஆய்வின் போது விளையாட்டு அரங்கில் உள்ள உள்கட்டமைப்பு வசதிகள், விளையாட்டு மைதானத்தின் தற்போதைய நிலை மற்றும் வீரர்களுக்கான வசதிகள் குறித்து அவர் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்