அமைச்சர்கள் ரேஷன் அரிசி சாப்பிடுகிறார்களா? மேடையில் ஆதவ் அர்ஜுனா கேள்வி எழுப்பிய வீடியோ!

Share this Video

சமீபத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய Aadhav Arjuna, தற்போதைய ஆட்சியாளர்கள் மற்றும் அமைச்சர்களை நோக்கி அதிரடி கேள்விகளை எழுப்பியுள்ளார். "எந்த அமைச்சராவது மக்கள் சாப்பிடும் ரேஷன் அரிசியை சாப்பிடுகிறார்களா? அல்லது நோய் வந்தால் சிகிச்சை பெற அரசு மருத்துவமனைக்குச் செல்கிறார்களா? மாறாக அவர்கள் தனியார் மருத்துவமனைக்கோ அல்லது சிங்கப்பூருக்கோ தான் செல்கிறார்கள்" என்று காட்டமாக விமர்சித்துள்ளார். பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகளின் தரத்தை சுட்டிக்காட்டும் வகையிலான அவரது இந்த பேச்சு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Related Video