
துப்புரவு பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்து பணியாளர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் !
ஆக்கிரமத்தில் உள்ள பஞ்சமி நிலங்களை மீட்டு தூய்மை பணியாளர்கள் மற்றும் எஸ்சி எஸ்டி பணியாளர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும், மேலும் தூய்மை பணியாளர்களுக்கு கையுறை, முக கவசம், சீருடை உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களை வழங்கி பணியில் ஈடுபடுத்தப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கையில் பதாகைகள் ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்