116 நாட்களில் 8 லாக்கப் மரணங்களா? – பேரவையில் ஆளுங்கட்சியை கதறவிட்ட உதயநிதி ஸ்டாலின் பேச்சு!

Share this Video

தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் (பகுதி-6), சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், மாநிலத்தின் தற்போதைய சட்டம் ஒழுங்கு சீர்கேடுகள் மற்றும் ஆளுங்கட்சியின் செயல்பாடுகளைக் கடுமையாகச் சாடிப் பேசினார்.தனது உரையில், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலுமாகச் சீர்குலைந்து போய்விட்டதாகவும், கடந்த சில மாதங்களில் மட்டும் எட்டு காவல் மரணங்கள் (Custodial Deaths) நிகழ்ந்துள்ளதாகக் கூறி அதிர்ச்சித் தகவல்களை முன்வைத்தார். மேலும், முந்தைய திமுக அரசு கொண்டுவந்த மக்கள் நலத் திட்டங்களை முடக்குவதையும், புதிய திட்டங்கள் எதையும் செயல்படுத்தாமல் இருப்பதையும் சுட்டிக்காட்டி ஆளுங்கட்சியைத் மிகக் கடுமையாக விமர்சித்தார். இது தொடர்பான உதயநிதி ஸ்டாலினின் காரசாரமான சட்டப்பேரவை பேச்சு அடங்கிய வீடியோ தொகுப்பு.

Related Video