சுவாமி ஜெயந்திநாதர், சூரனை வதம் செய்த பின்னர், திருக்கோவில் பிரகாரத்தில் இருக்கும் மகாதேவர் சன்னதிக்கு எழுந்தருளிகிறார். அப்போது சுவாமியின் எதிரே ஒரு கண்ணாடி வைக்கப்படுகிறது. கோவில் அர்ச்சகர், கண்ணாடியில் தெரியும் சுவாமி ஜெயந்திநாதரின் பிம்பத்திற்கு அபிஷேகம் செய்கிறார். இதையே சாயாபிஷேகம் என்று பக்தர்கள் கூறுகின்றனர்.