தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள இளங்கார்குடியை சேர்ந்தவர் விஜயகுமாருக்கும், நெடுந்துறையை சேர்ந்த லட்சுமி என்பவருக்கம் கடந்த 2018 -ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2019-ம் ஆண்டு பாபநாசம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில், 2வது முறை கர்ப்பமான லட்சுமி, கடந்த செப்டம்பர் 29-ம் தேதி பிரசவத்திற்காக தஞ்சை இராசா மிராசுதார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.