
வைரமுத்து எழுதிய பாடலால் பிளாப் ஆன மணிரத்னம் படம் பற்றி தெரியுமா?
திருடா திருடா திரைப்படத்தில், கவிஞர் வைரமுத்து எழுதி, இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், சாகுல் ஹமீது அவர்கள் பாடிய 'ராசாத்தி! என்னுசுரு என்னதில்ல!' எனும் பாடல் ஒரு தனித்துவமான பாடல் ஆகும். எந்தவொரு இசைக்கருவியையும் பயன்படுத்தாமல், ஒரு பாடலுக்கு இசையமைக்கும் முறையை 'அகபெல்லா (Acapella)' என்பர். அவ்வாறாக இந்திய திரையுலகில் முதன்முதலாக பாடப்பட்ட அகபெல்லா பாடல் இதுவே ஆகும். இந்த பாடலை கேட்டவர்களால் கவிஞர், இசையமைப்பாளர் மற்றும் பாடகரை பாராட்டாமல் இருக்கமுடியாது. திரைப்படம் வெற்றிபெறாவிட்டாலும், இந்த பாடல் பெருமளவில் ரசிக்கப்பட்டது