
கமலா திரையரங்கில் ‘ஜன நாயகன்’ படத்தை ரசிகர்களுடன் கண்டு மகிழ்ந்த நடிகர் விமல் நெகிழ்ச்சி!
செக் மோசடி வழக்கு தொடர்பான சர்ச்சைகள் மற்றும் குற்றச்சாட்டுகளுக்கு இடையே, நடிகர் விமல் சென்னை கமலா திரையரங்கில் வெளியான 'ஜன நாயகன்' திரைப்படத்தை ரசிகர்களுடன் நேரில் அமர்ந்து பார்த்துள்ளார். படம் பார்த்த பின் ஊடகங்களிடம் பேசிய அவர், ரசிகர்கள் திரையரங்கில் பாட்டிற்கு நடனமாடி, படத்தின் தந்தை-மகள் பாசக் காட்சிகளை ரசித்துக் கொண்டாடிய விதம் தமக்கு பெரும் மகிழ்ச்சியளித்ததாகத் தெரிவித்தார். மேலும், தமிழகத்தின் நிஜமான வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் வகையில் அமைந்த இந்தப் படத்தை ரசிகர்களுடன் இணைந்து பார்த்த அனுபவம் மிகவும் நெகிழ்ச்சியாக இருந்ததாகவும் அவர் கூறினார்.