
Petrol Price Hike
சர்வதேச பதற்றத்தால் பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ் போன்ற நாடுகளில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. இப்போது இந்தியாவிலும் விலை உயரப் போகிறதாம். எப்போதிலிருந்து தெரியுமா? நாட்டில் விரைவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் கணிசமாக உயரக்கூடும் என கோடக் இன்ஸ்டிடியூஷனல் ஈக்விட்டிஸ் (KIE) தெரிவித்துள்ளது. ஐந்து மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல்கள் முடிந்தவுடன் எரிபொருள் விலைகள் உயரும் என்று அந்த அறிக்கை தெளிவுபடுத்தியுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளதால், ஒரு லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை ரூ. 25 முதல் ரூ. 28 வரை உயர்த்த வேண்டிய தேவை உள்ளது என்று கூறப்பட்டுள்ளது. இருப்பினும், மக்களுக்குச் சுமையை ஏற்படுத்துவதைத் தவிர்ப்பதற்காக, விலைகள் ஒரேயடியாக உயர்த்தப்படாமல், கட்டம் கட்டமாக உயர்த்தப்பட வாய்ப்புள்ளது என்று கோடக் அறிக்கை தெரிவிக்கிறது.