Asianet News TamilAsianet News Tamil

அருந்ததியர்களை வந்தேறிகள் என்று விமர்சித்த சீமானுக்கு வலுக்கும் கண்டனம்! தொடரும் ஆர்ப்பாட்டம்!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அருந்ததிய சமூதயத்தினரை வந்தேறிகள் என்று விமர்சித்த நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமானை கண்டித்து சாலை மறியல் போராட்டம் நடந்து வருகிறது
 

பட்டியல் இன மக்களை அவதூறாக பேசிய விவகாரத்தில் ஈரோடு கிழக்கு தொகுதி ராஜாஜி புரம் பகுதியில் பிரசாரம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டதால், நாம் தமிழர் கட்சி மற்றும் திமுக இடையே கைகலப்பு ஏற்பட்டது. நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், அருந்ததிய சமூதயத்தினரை வந்தேறிகள் என்றும், மலம் அல்லுவதற்கு ஆந்திராவில் இருந்து வந்தவர்கள் என்றும் விமர்சித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதைத்தொடர்ந்து, சீமானை கண்டித்து மறியல் போராட்டத்தில் அருந்ததியர் சமுதாயத்தினர் ஈடுபட்டுள்ளனர். 

Video Top Stories