
Watch Video
லஞ்சப் பணம் வாங்குகையில் கையும் களவுமாக சிக்கிய நபர், அதிகாரிகளிடம் இருந்து தப்பிப்பதற்காக அப்பணத்தை வாயில் போட்டு விழுங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
மத்தியப்பிரதேச மாநிலத்தில் லோக் ஆயுக்தா அதிகாரிகள் வலையில் கையும் களவுமாக ரூ. 5,000 லஞ்சம் வாங்கும்போது அதிகாரி கஜேந்திர சிங் சிக்கினார். அப்போது, அதிகாரிகள் பார்த்துவிட்டனர் என்ற அச்சத்தில் பணத்தை வாயில் போட்டு மென்று முழுங்கினார். இதனால் அதிகாரிகள் என்ன செய்வதென்று தெரியாமல் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக மருத்துவமனைக்கு சிங் அழைத்து செல்லப்பட்டார். மருத்துவர்கள் அவர் ஆரோக்கியமாக இருப்பதாக தெரிவித்தனர்.