கோவை குனியமுத்தூரில் பெட்ரோல் குண்டு வீசியது தொடர்பாக எஸ்டிபிஐயை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுக்குறித்து பேசிய கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன், கோவை குனியமுத்தூரில் பெட்ரோல் குண்டு வீசியது தொடர்பாக கிடைத்த சிசிடிவி பதிவின் அடிப்படையில் எஸ்டிபிஐ சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்கள் ஜேசுராஜ், இலியாஸ் என்று தெரியவந்துள்ளது என்று தெரிவித்தார்.

09:23 PM (IST) Sep 25
தங்களது சரியான பொசிஷனில் நிற்க தடுமாறும் வீடியோ ஒன்றும் சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது. அதோட தனது டீமை வெயிலிலிருந்து செக்யூர் பண்ணும் ஜெயம் ரவியின் க்யூட் காட்சிகளும் அதில் இடம் பிடித்துள்ளது.
ஒரு போட்டோவுக்காக என்ன பாடு படுத்துறாங்க...சிக்கி தவிக்கும் பொன்னியின் செல்வன் டீம்
08:19 PM (IST) Sep 25
ஜெசிக்கா என்னும் பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திழுத்தது. இந்நிலையில் இந்த பாடலின் ஸ்டெப் ஜெசிக்கா சேலஞ்ச் என்னும் பெயரில் ட்ரெண்டாகி வருகிறது.
வைரலாகும் ஜெசிக்கா சேலஞ்ச்..மாஸ் காட்டும் சிவகார்த்திகேயனின் செகண்ட் சிங்கிள்
08:16 PM (IST) Sep 25
ரசிகர்களிடம் வீணாக ஓட்டு வாங்கி எலிமினேஷன் என்ற பெயரில் கண்துடைப்பை பிக் பாஸ் நிகழ்ச்சி நடத்துவதாகவும் கூறியுள்ளார் அபிநயா ஸ்ரீ.
நாம் நினைப்பது போல பிக்பாஸ் நிகழ்ச்சி நடப்பதில்லை...புலம்பித்தள்ளிய பிரபல நடிகையின் மகள்
07:01 PM (IST) Sep 25
மேலும் ஷாருக்கானின் புகைப்படத்திற்கு கிங் மீண்டும் வருகிறார் என ஒருவர் எழுதியுள்ளார். மற்றொரு ரசிகர் வயது ஏற ஏற உங்களுக்கு ஹாட் அதிகமாகிறது எனவும் கூறியுள்ளனர்.
ஷாருக்கானின் கட்டுடலை பார்த்து கலங்கிப்போன ரசிகர்கள்..என்னமா மெயிண்டன் பன்றாரு !
06:58 PM (IST) Sep 25
உலக நாயகன் தனது உடற்தகுதி பயிற்சியாளருக்கு ரெனால்ட் காரை பரிசாக வழங்கினார். அந்த புகைப்படத்தில் மிகவும் இளமையாக பிட்டாக இருக்கிறார் கமலஹாசன்.
தன்னை இளமையாய் மாற்றிய பிட்னஸ் ட்ரைனருக்கு...ரொனால்டு காரை பரிசாக கொடுத்த உலகநாயன்
05:59 PM (IST) Sep 25
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகாவிற்கு உட்பட்ட கடமலைக்குண்டு அருகே உள்ள சின்ன சுருளி அருவியில், நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கன மழையால் காரணமாக நீர் ஆர்பரித்து கொட்டுகிறது. மேலும் படிக்க
05:35 PM (IST) Sep 25
காஞ்சிபுரம் மாவட்டம் திருக்காளிமேடு பகுதியை சேர்ந்த நிர்மல்குமார் என்பவர் சஹானா எனும் யோகா மையத்தை நிறுவி, அதன் மூலம் பலருக்கும் இலவசமாக யோகா பயிற்சி அளித்து வருகிறார்.மேலும் படிக்க
05:09 PM (IST) Sep 25
உத்தரபிரதேசம் சீதாபூர் மாவட்டத்தில் உள்ள ஆதர்ஷ் ராம் ஸ்வரூப் இன்டர் கல்லூரியில் இந்த சம்பவம் நடந்தேறியுள்ளது. இன்று வழக்கம் போல் பள்ளி முதல்வர் ராம் சிங் வர்மா, 12 ஆம் வகுப்பறையில் நூழைந்த போது, மாணவன் குர்விந்தர் சிங், தான் ஒளித்து வைத்திருந்த தூப்பாக்கியை எடுத்து சுட்டுள்ளான்மேலும் படிக்க
04:43 PM (IST) Sep 25
ஆன்லைனில் ரம்மி விளையாடி பணத்தை இழந்ததால் கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
04:23 PM (IST) Sep 25
தயவு செய்து இது போன்ற பேக் மெசேஜ் வந்தால் லிங்கை கிளிக் செய்யாதீர்கள். தேவையில்லாத லோன் ஆப்புகளை டவுன்லோட் செய்யாதீர்கள் என கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.
இந்த லிங்கை க்ளிக் பண்ணாதீங்க..அசிங்க படுத்திடுவாங்க...கதறி அழும் சீரியல் நடிகை
04:15 PM (IST) Sep 25
கடந்த ஆட்சியில் கூட்டுறவுத் துறையில் 15 ஆயிரம் கோடி ஊழல் நடந்ததாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் குற்றம் சாட்டியுள்ளார்.
03:53 PM (IST) Sep 25
சீனா அதிபர் ஜி ஜின்பிங் தற்போது ராணுவத்தின் மூலமாக சிறைவைக்கப்பட்டிருக்கிறார் என்ற தகவல் அனைவரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
03:53 PM (IST) Sep 25
சீனா அதிபர் ஜி ஜின்பிங் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்றும் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்கள்.
03:45 PM (IST) Sep 25
நெல்லை மாவட்டம் திருவேங்கடநாதபுரத்தில் தாமிரபரணி ஆற்றின் கரையில் உள்ள சிறு குன்றின் மீது இக்கோவில் அமைந்துள்ளது. இங்கு வெங்கடாசலபதி ஸ்ரீதேவி, பூதேவியுடன் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் எழுந்தருளியுள்ளார்.மேலும் படிக்க
03:30 PM (IST) Sep 25
அண்ணா விளையாட்டு அரங்கில் இருந்து சுமார் 5 கிலோமீட்டர் தொலைவிற்கு மாரத்தான் போட்டி நடைபெற்றது. இதனை திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையர் சீனிவாசன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். முன்னதாக போதைப் பொருள்கள் ஒழிப்பு குறித்து உறுதி மொழி எடுக்கப்பட்டது. மேலும் படிக்க
03:16 PM (IST) Sep 25
பின்னர் காதல் பாடல் ஒலிக்க இவர்களது காதல் காட்சி அரங்கேறுகிறது. இன்று இரவு எட்டு மணிக்கு ஒளிபரப்பாக உள்ள இந்த நிகழ்ச்சியின் ப்ரோமோ தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறார்..
ஒரு வழியாக அமீரின் காதலை ஏற்றுக்கொண்ட பாவனி ...வைரலாகும் ரொமாண்டிக் ப்ரோமோ
03:06 PM (IST) Sep 25
இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பொன்னியின் செல்வன் பட நட்சத்திரங்கள், அப்படத்தை முழுவீச்சில் புரமோட் செய்து வருகின்றனர். இது ஒரு புறம் இருக்க, இப்படத்தை தயாரித்துள்ள லைகா நிறுவனம், உலகளவிலும் பிரம்மாண்டமாக புரமோஷன் பணிகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் படிக்க
02:58 PM (IST) Sep 25
நீலகிரி மாவட்டம் உதகை மையப்பகுதியில் உள்ள நகராட்சி சந்தையில் சுமார் 1700 க்கும் மேற்பட்ட கடைகள் இயங்கி வருகின்றன. இந்நிலையில் நேற்று நள்ளிரவு 15 க்கும் மேற்பட்ட கடைகளில் பூட்டை உடைத்து கொள்ளை சம்பவம் நடந்துள்ளது.மேலும் படிக்க
02:36 PM (IST) Sep 25
இந்நாளில் எஸ்பிபி குரலில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த பாடல்களின் சில தொகுப்புகளை காணலாம்.
எஸ்.பி. பாலசுப்ரமணியம் அவர்களின் நினைவு நாளில்..மனதை கவர்ந்த பாடல்களில் சில
02:27 PM (IST) Sep 25
மணிரத்னம் இயக்கியுள்ள பிரம்மாண்ட படைப்பான பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30-ந் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய 5 மொழிகளில் பான் இந்தியா படமாக ரிலீசாக உள்ளது. இப்படத்தில் விக்ரம், திரிஷா, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஜெயம் ரவி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. அவர்களுக்கு இப்படத்தில் நடிக்க வழங்கப்பட்ட சம்பளம் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம். மேலும் படிக்க
02:06 PM (IST) Sep 25
புரட்டாசி மகாளய அமாவாசையை முன்னிட்டு புதுச்சேரி கடற்கரை, மற்றும் திருக்காஞ்சி சங்கராபரணி ஆறு உள்பட பல்வேறு கோயில்களில் பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளித்து வழிபட்டனர்.மேலும் படிக்க
01:43 PM (IST) Sep 25
இந்தியாவின் வட மாநிலங்களில் இருப்பதைப் போல வன்முறையைத் தூண்டி, சாதி, மத அடிப்படையில் மக்களைப் பிளவுபடுத்தி அரசியல் செய்ய முற்படுவதாக திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார்.
01:40 PM (IST) Sep 25
மறைந்த முன்னோர்களுக்கு புரட்டாசி மாதம் மஹாளய அமாவாசை அன்று தர்ப்பனம் செய்தால் புண்ணியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.அதன்படி இன்று தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் மக்கள் தங்களது முன்னோர்களுக்கு வழிபாடு நடத்தினர். மேலும் படிக்க
01:39 PM (IST) Sep 25
துணிவு படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் கடந்த சில தினங்களாக வெளியிடப்பட்ட நிலையில், தற்போது அதற்கு போட்டியாக வாரிசு படக்குழுவும் அப்டேட்டுகளை வெளியிட்டுள்ளது. மேலும் படிக்க
01:29 PM (IST) Sep 25
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த கள்ளிப்பட்டியில் இன்று 15 ஆண்டுகளுக்கு பிறகு மீன்பிடித்திருவிழா நடைபெற்றது. குளத்தில் நீரின் அளவு குறைந்துள்ளதால், கிராம மக்கள் சார்பில் தற்போது மீன்பிடித் திருவிழா நடத்த முடிவு செய்யபட்டது. மேலும் படிக்க
12:55 PM (IST) Sep 25
சமூக அமைதியைக் கெடுக்கும் வகையில் தமிழகத்தில் பெரும் மதக்கலவரங்களை ஏற்படுத்தத் திட்டமிடும் மதவாதச் சக்திகளை உடனடியாக கடும் நடவடிக்கைகள் எடுத்து ஒடுக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
12:16 PM (IST) Sep 25
மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர் ஸ்ரேயாசி பட்கர். இவருக்கு வயது 24. இவர் மும்பையிலுள்ள நாயர் மருத்துவக் கல்லூரியில் ஆக்குபேஷனல் தெரபி படித்து வருகிறார். மேலும் படிக்க
11:57 AM (IST) Sep 25
அமைதிப் பூங்கா என்று பெயரெடுத்த தமிழகத்தை, வெடிகுண்டு கலவர கலாச்சாரத்துக்கு மாற்ற முயல்வோரை இரும்புக் கரம் கொண்டு அடக்கி, சட்டம்-ஒழுங்கையும், அமைதியையும் பாதுகாக்க வேண்டும் என கமல்ஹாசன் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும் படிக்க..
11:49 AM (IST) Sep 25
நிதி அகர்வால் தற்போது உதயநிதிக்கு ஜோடியாக கலகத்தலைவன் படத்தில் நடித்துள்ளார். மகிழ் திருமேனி இயக்கியுள்ள இப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நிதி அகர்வால் அவ்வப்போது ரசிகர்களுடன் கலந்துரையாடுவதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் சமீபத்தில் கலந்துரையாடிய போது ரசிகர்கள் கேட்ட ஏராளமான கேள்விகளுக்கு பதிலளித்தார். மேலும் படிக்க
11:07 AM (IST) Sep 25
பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் இது போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள், தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள் என எச்சரிக்கப்படுவதாக டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.
10:59 AM (IST) Sep 25
ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், மசூதி மற்றும் மதராசா பள்ளி செல்வதற்கு பதிலாக, படுகொலை செய்யப்பட்ட பில்கிஸ் பானு மற்றும் முகமது அக்லக் குடும்பத்தினரை சந்திக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. மேலும் ஆர்எஸ்எஸ் தலைவர் பகவத் மசூதி சென்ற சம்பவம், எம்.பி ராகுல் காந்தியின் ‘பாரத் ஜோடோ யாத்ரா’ நடைபயணம் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தை காட்டுகிறது என்று காங்கிரஸ் எம்.பி திக்விஜய் சிங் தெரிவித்துள்ளார். மேலும் படிக்க
10:01 AM (IST) Sep 25
திரையுலகைச் சேர்ந்த பலரும் போண்டா மணிக்கு தங்களால் முடிந்த உதவியை தொடர்ந்து செய்து வரும் நிலையில், நடிகர் தனுஷ், நடிகர் போண்டா மணியின் மருத்துவ செலவுக்காக ரூ,1 லட்சம் நிதி உதவி வழங்கி உள்ளார். தனுஷ் அனுப்பிய பணம் தனக்கு மிகவும் உதவியாக இருப்பதாக கூறி அவருக்கு நன்றியும் தெரிவித்துள்ளார் போண்டா மணி. மேலும் படிக்க
09:31 AM (IST) Sep 25
ஒன்று மட்டும் நன்றாக புரிகிறது. திமுகவினரை ஆட்சியில் அமரவைத்தது போன்ற ஒரு மிகப்பெரிய தவற்றை, இனி ஒருநாளும் தமிழக மக்கள் செய்ய மாட்டார்கள் என்பது தெளிவாக உறுதியாகிவிட்டது என சசிகலா தெரிவித்துள்ளார்.
09:07 AM (IST) Sep 25
கவுதம் மேனனுக்கு பைக் மிகவும் பிடிக்கும் என்பதால், அவருக்கு ரூ.2 லட்சம் மதிப்புள்ள புல்லட் ஒன்றை பரிசாக வழங்கினார் ஐசரி கணேஷ். இதையெல்லாம் விட சிம்புவுக்கு அவர் கொடுத்த பரிசு தான் வேறலெவல். அவருக்கு சொகுசு கார் ஒன்றை பரிசாக அளித்துள்ளார்.மேலும் படிக்க
09:06 AM (IST) Sep 25
கடந்த 10 ஆண்டுகளாக எப்படி இருந்த தமிழகம் 18 மாதங்களில் இப்படி ஆகிவிட்டதே என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சனம் செய்துள்ளார்.
08:36 AM (IST) Sep 25
தமிழகத்தில் அமைதியான நிலை திரும்ப சட்டம் ஒழுங்கு சரியான முறையில் பராமரிக்கப்படுவதை உறுதி செய்ய தமிழக அரசுக்கு தேவையான வழிகாட்டுதலை மத்திய உள்துறை அமைச்சரகம் வழங்க வேண்டும் என அண்ணாமலை கேட்டுக்கொண்டுள்ளார்.
08:35 AM (IST) Sep 25
வாரிசு படம் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ள 2023 பொங்கல் அன்றுதான் துணிவு படமும் ரிலீஸ் ஆகும் என ஒரு கருத்தும் நிலவி வருகிறது. அதற்கு ஏற்ப பிரபல தயாரிப்பாளரும் நடிகருமான ஆர் கே சுரேஷ் தனது ட்விட்டரில் "உலகம் முழுவதும் பொங்கல் அன்று துணிவு" என பதிவிட்டுள்ளார். மேலும் படிக்க
08:09 AM (IST) Sep 25
மும்பையில் நேற்று நடைபெற்ற பொன்னியின் செல்வன் படத்தின் பிரஸ் மீட்டில் நடிகர் விக்ரம் பேசுகையில் தஞ்சாவூர் பெரிய கோவில் எவ்வாறு கட்டப்பட்டது என்பதை பற்றியும், ராஜ ராஜ சோழன் ஆட்சி காலத்தில் செய்யப்பட்ட மேம்பாட்டு பணிகள் பற்றியும் விவரித்தார். அவரின் அந்த பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் படிக்க
07:20 AM (IST) Sep 25
இன்று மதியம் 2 மணிக்கு உங்களுக்கு பரபரப்பான செய்தியை சொல்கிறேன் என்று முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் தோனி பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். இதையடுத்து தோனி என்ன சொல்லப்போகிறார் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்துக்கொண்டிருக்கின்றனர். மேலும் படிக்க
07:16 AM (IST) Sep 25
டெல்லியில் வருகிற அக்டோபர் 1ம் தேதி 5ஜி சேவையை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி. முதற்கட்டமாக சென்னை, டெல்லி, மும்பை உள்ளிட்ட பெரு நகரங்களில் மட்டும் 5ஜி சேவை அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது. பின்னர் இதர நகரங்களுக்கு படிப்படியாக இந்த சேவை கிடைக்கும் என தெரிகிறது.