02:02 PM (IST) Aug 31

விநாயகர் சதுர்ச்சியை கொண்டாடிய சசிகலா.. ஜெயலலிதா படத்தை வைத்து வழிபாடு.. வீடியோ இதோ !!

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சசிகலா இன்று தனது வீட்டில் சாமி தரிசனம் செய்த, வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் அனைத்து கடவுள்களின் படங்களும் இடம்பெற்றுள்ளன. மேலும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் புகைப்படம் வைக்கப்பட்டுள்ளது.மேலும் படிக்க

01:47 PM (IST) Aug 31

மகன் சிம்புவுக்கு பெண் கேட்டு போய்.. அசிங்கப்பட்டாரா டி.ராஜேந்தர்? என்ன ஆச்சு.. வெளியான அதிர்ச்சி தகவல்!

நடிகர் சிம்புவுக்கு உறவினர்களிடம் பெண் கேட்க சென்று டி.ராஜேந்தர் அசிங்கப்பட்டதாக வெளியாகி உள்ள தகவல் கோலிவுட் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் படிக்க...

01:46 PM (IST) Aug 31

'நட்சத்திரம் நகர்கிறது' படம் எப்படி இருக்கு? ஷார்ட் விமர்சனம் இதோ..

'சார்பட்டா பரம்பரை' திரைப்படத்தின் சூப்பர் ஹிட் வெற்றிக்கு பின்னர், இயக்குனர் பா.ராஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'நட்சத்திரம் நகர்கிறது' இந்த படம் குறித்த விமர்சனம் இதோ...

01:15 PM (IST) Aug 31

அப்போது நீங்க தான் சொன்னீங்க.. இப்போது ஒரு கையெழுத்து போட்டா போதும்.. செய்வாரா ஸ்டாலின்..? அன்புமணி கோரிக்கை..

கடந்த ஆண்டின் கொள்முதல் விலையை விட மத்திய அரசு குவிண்டாலுக்கு ரூ.100 மட்டுமே உயர்த்தியுள்ளது. மத்திய அரசு கொள்முதல் விலையை திருப்தியளிக்கும் அளவுக்கு உயர்த்தாத நிலையில், மாநில அரசு தான் ஊக்கத்தொகையை உயர்த்தி உழவர்களின் எதிர்பார்ப்பை ஓரளவாவது ஈடு செய்ய வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்மேலும் படிக்க

01:07 PM (IST) Aug 31

டைல்ஸ் பதித்ததால் என் தாய்மாமனை இழந்துவிட்டேன்... சோகத்தில் நடிகர் நட்டி நட்ராஜ்

பிசியான நடிகராக வலம் வரும் நட்டி நட்ராஜ், தனது தாய்மாமனின் இறப்பு குறித்து உருக்கமாக பதிவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் போட்டுள்ள டுவிட்டில், “Tiles.. இது முதியோர்களின் எதிரி.. சமீபத்தில் எனது தாய் மாமனை இழந்து விட்டேன்.. காரணம் குளித்துவிட்டு வந்த உடன் கால் வழுக்கி கீழே விழுந்து தலையில் அடிபட்டு உயிர் இழந்தார்.. நம்முடய கௌரவம் tiles ல் இல்லை. நம் முதியோர்களை காப்பதில் இருப்பது” என பதிவிட்டுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர். மேலும் படிக்க

12:54 PM (IST) Aug 31

தலித் மக்கள் படுகொலை, தலித் பெண்கள் கற்பழிப்பு தொடர்கிறது.. ஸ்டாலின் அரசை எச்சரித்த திருமாவளவன்.

அதிக அளவில் தலித் பெண்கள் குறி வைத்து பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுகின்றனர் என்றும், அதில் இந்தியாவிலேயே தமிழகம் 5வது இடத்தில் இருக்கிறது என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார். தலித் மக்கள் படுகொலை சம்பவங்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்றும், அதைத் தமிழக முதலமைச்சர் இனி அனுமதிக்கக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.மேலும் படிக்க

12:54 PM (IST) Aug 31

8 வழிச்சாலையில் நாடகம்.? மக்களிடம் பகிரங்கமாக சொல்லுங்க... ஸ்டாலினை ரவுண்டுகட்டும் அண்ணாமலை.

எட்டுவழிச்சாலைதிட்டத்தில் திமுகவின் நிலைபாடு என்ன என்பதை முதலமைச்சர் ஸ்டாலின் மக்களிடம் வெளிப்படையாக கூற வேண்டும் என பாஜக மாநிலத்த தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையின் விவரம் பின்வருமாறு: மேலும் படிக்க


12:21 PM (IST) Aug 31

தேர்தல வாக்குறுதி கொடுத்தீங்க.. 15 மாசம் ஆயிடுச்சி என்ன பண்ணீங்க..? முதல்வரை விளாசும் ஓபிஎஸ்

இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து சிறைபிடிக்கப்படுவதை தடுக்கவும், அவர்களுடைய படகுகள் பறிமுதல் செய்யப்படுவதை நிறுத்தவும், இரு நாட்டு கடற்கரை பகுதிகளிலும் சிக்கல் தீர்க்கும் மையங்களை உருவாக்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை முதல்வர் எடுக்க வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.மேலும் படிக்க

12:14 PM (IST) Aug 31

விஜய்க்கு மட்டும் அம்மாவாக நடிக்காதது ஏன்? - உண்மையை ஓப்பனாக போட்டுடைத்த சரண்யா பொன்வண்ணன்

தமிழ் சினிமாவில் அம்மா கேரக்டர் என்றாலே சரண்யா தான் என சொல்லும் அளவுக்கு அனைத்து முன்னணி நடிகர்களுக்கும் அம்மாவாக நடித்துவிட்ட சரண்யா பொன்வண்ணன், இதுவரை விஜய்க்கு மட்டும் அம்மாவாக நடித்ததே இல்லை. மேலும் படிக்க

11:49 AM (IST) Aug 31

விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்.. என்னென்ன கட்டுப்பாடுகள் விதிப்பு.. மதுரை கிளை உத்தரவு..

விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு கட்டுப்பாடுகள் விதித்து உயர்நீதிமன்றம் மதுரை கிளை இன்று உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இதனால் கோவில்களில் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகமும், பூஜைகளும் நடைபெறுகின்றன. மேலும் படிக்க

10:53 AM (IST) Aug 31

அதிமுக அலவலகம் கலவர வழக்கு - விசாரணை அதிகாரி நியமனம்

அதிமுக அலுவலகத்தில் நடந்த கலவரம்தொடர்பான வழக்கில் சிபிசிஐடி விசாரணை அதிகாரியாக டிஎஸ்பி வெங்கடேசன் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த ஜூலை 11 ஆம் தேதி அதிமுக அலுவலகத்தில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆதரவாளர்களிடையே மோதல் ஏற்பட்டு, வன்முறை வெடித்தது. இதனையடுத்து அதிமுக அலுவலகத்திற்கு வருவாய்துறையினர் சீல் வைத்தனர். அப்பகுதியில் 144 தடை உத்தரவு போடப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கில் தற்போது விசாரணை அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் காவல் ஆய்வாளர்கள் லதா, ரம்யா, ரேணுகா, செல்வின் சாந்தகுமார் ஆகியோர் விசாரணை குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

10:36 AM (IST) Aug 31

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரண வழக்கு.. கைதான பள்ளி தாளாளர் உட்பட 5 பேர் ஜாமினில் வெளியே வந்தனர்.

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி மரண வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த பள்ளி தாளாளர் உட்பட 5 பேர் இன்று ஜாமினில் விடுவிக்கப்பட்டனர். மேலும் படிக்க

09:47 AM (IST) Aug 31

மக்களே உஷார் !! 4 நாட்களுக்கு விடாது ஊற்றப் போகும் மழை.. இன்று 16 மாவட்டங்களில் கனமழை

தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை உள்ளிட்ட 16 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க

09:27 AM (IST) Aug 31

ஏன்டி நான் படம் பண்ணும்போது நீ இல்லாம போன... ரேகா நாயரிடம் வருத்தப்பட்ட பாரதிராஜா

பரபரப்புக்கு பஞ்சமில்லாத நடிகையாக வலம் வரும் ரேகா நாயர், பேட்டி ஒன்றில் இயக்குனர் இமயம் பாரதிராஜா குறித்து உருக்கமாக பேசியுள்ளார். அதில் அவர் கூறியதாவது : “நான் பாரதிராஜா சாரை அவ்வப்போது பார்த்து பேசுவேன். அப்போதெல்லாம் அவர் என்னிடம் கேட்பது ஒன்றுதான், ஏன்டி நான்லாம் படம் பண்ணும்போது நீ இல்ல. அப்பல்லாம் ஏன் நீ என்ன வந்து பாக்கல. நீயெல்லாம் ஹீரோயின் மெட்டீரியல் டீ-னு சொல்வார். மேலும் படிக்க

09:07 AM (IST) Aug 31

ஷாக்!! ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த மத்திய அரசு.. டிக்கெட் முன்பதிவு குறித்து வெளியான தகவல்..

ரயில் டிக்கெட்களை முன்பதிவு செய்து ரத்து செய்தால் சேவை கட்டணத்துடன் சேர்த்து ஜிஎஸ்டி வரியும் வசூலிக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது. ஏசி அல்லது முதல் வகுப்பு பயணிகளுக்கு மட்டுமே இந்த விதிமுறை பொருந்தும் என்றும் நிதித்துறை தெரிவித்துள்ளது.மேலும் படிக்க

09:06 AM (IST) Aug 31

TNPSC போட்டித்தேர்வர்களுக்கு மகிழ்ச்சி செய்தி - குரூப் 5 தேர்வு தேதி வெளியானது.. முழு தகவல்கள் இதோ !!

டிஎன்பிஎஸ்சி குரூப் 5 தேர்வுத் தேதி வெளியிடப்பட்டுள்ளது. இன்று முதல் செப்டம்பர் 21 வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் படிக்க

08:44 AM (IST) Aug 31

கல்யாணத்தை போல்... ஹனிமூனையும் ஒரு ரூபா செலவில்லாமல் முடித்ததா விக்கி - நயன் ஜோடி? - வெளியான புதுத் தகவல்

ஹனிமூன் கொண்டாட வெளிநாட்டுக்கு சென்றிருக்கும் விக்கி - நயன் ஜோடி பற்றி மேலும் ஒரு புதுத்தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி அவர்கள் இருவரும் தற்போது சென்றிருக்கும் இரண்டாவது ஹனிமூனுக்கான முழு செலவையும் நெட்பிளிக்ஸ் நிறுவனம் தான் ஏற்றுள்ளதாகவும், திருமணத்தைப் போல் இதற்கு அவர்கள் ஒரு ரூபாய் கூட செலவழிக்க வில்லை என்று கூறப்படுகிறது. மேலும் படிக்க

08:09 AM (IST) Aug 31

கம்பேக் கொடுத்தாரா விக்ரம்..! சியானின் ‘கோப்ரா’ சாதித்ததா?... சோதித்ததா? - விமர்சனம் இதோ

படம் தமிழகத்தில் 800-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ரிலீஸ் செய்யப்பட்டு உள்ளது. இன்று அதிகாலை 5 மணிக்கு கோப்ரா படத்தின் FDFS திரையிடப்பட்டது. இப்படத்தை ரசிகர்களுடன் சேர்ந்து நடிகர் விக்ரம் மற்றும் கோப்ரா படக்குழுவினர் கண்டுகளித்தனர். இப்படத்தின் டுவிட்டர் விமர்சனம் இதோ

07:52 AM (IST) Aug 31

மக்களே அலர்ட்!! இனி முக கவசம் அணியாவிட்டால் அபராதம்.. அதிரடி அறிவிப்பு வெளியானது..

சென்னை விமான நிலையத்தில் முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று விமான நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க

07:12 AM (IST) Aug 31

கவனத்திற்கு!! முதுநிலை பட்டத்தாரி ஆசிரியர் நியமனம்.. சான்றிதழ் சரிபார்ப்பு எப்போது தெரியுமா..?

முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு ஆசிரியர் தேர்வு வாரிய வளாகத்தில் செப்டம்பர் 2 ஆம் தேதி முதல் 4 ஆம் தேதி வரை நேரடியாக நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. அப்போது கைப்பேசி, பைகள் உள்ளிட்ட பொருள்கள் எடுத்து வர அனுமதியில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் படிக்க