Asianet News TamilAsianet News Tamil

திருப்பூரில் அதிகரிக்கும் விபச்சாரம்.. ரெய்டு விட்ட போலீஸ்.. கையும் களவுமாக சிக்கிய அழகிகள்..

திருப்பூரில் தனியார் தங்கும் விடுதியில் பெண்களை வைத்து விபச்சாரத்தில் ஈடுபட்டு இரண்டு ஆண்கள் மீது திருப்பூர் மாநகர காவல் துறையினர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்துள்ளனர்.

திருப்பூரில் பிணலாடை நிறுவனங்களில் பணியாற்றக்கூடிய நபர்களை குறிவைத்து பல்வேறு தனியார் தங்கும் விடுதிகளில் விபச்சாரம் நடைபெற்று வருவதாக மாநகர காவல் துறைக்கு ரகசிய தகவல் வந்ததை எடுத்து திருப்பூர் மாநகர காவல் ஆணையர் பிரவீன் குமார் அபினபு உத்தரவின் பேரில் கடந்த மார்ச் மாதம் 23ஆம் தேதி பழைய பேருந்து நிலையம் அருகில் செயல்பட்டு வந்த குரலகம் என்ற தனியார் தங்கும் விடுதியை தெற்கு காவல் ஆய்வாளர்.கணேஷ் குமார் தலைமையில் காவல் துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

இதில் சென்னை ஆவடியை சேர்ந்த பெண்ணை வைத்து விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்டு வந்தது தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து தனியார் தங்கும் விடுதியில் மேலாளராக பணியாற்றி வந்த திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த அருண் என்பவரையும் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த தமிழரசன் என்பவரையும் திருப்பூர் தெற்கு காவல் துறையினர் கைது செய்தனர் மேலும் விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்டு வந்த பெண்ணை மீட்டு பெண்கள் காப்பகத்தில் ஒப்படைத்தனர். இந்நிலையில் தொடர்ந்து பொதுமக்களுக்கும் பொது அமைதிக்கும் குந்தகம் விளைவிக்கும் விதமாக விபச்சார தொழிலில் ஈடுபட்டு வந்த இரண்டு நபர்கள் மீதும் திருப்பூர் மாநகர காவல் துறையினர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்துள்ளனர்.

Video Top Stories